மதிப்பிற்குரிய தத்துவ குரு முனுசாமி அவர்களின் விளக்கம்,
பக்தன் என்பவன் தன் உடல், பொருள் , ஆவி அனைத்தையும் ஒரு படைப்புக்காக (இறைவன், பெண், குடி, காதல்,தொழில்,.....) தம்மையே அர்ப்பணம் செய்து கொள்பவன்.
எ.கா
செய்யும் தொழிலே தெய்வம் .
சித்தன் என்பவன் எந்தவொரு சடங்கு, சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருக்கமாட்டான். முற்போக்கு சிந்தனை கொண்டவனாக இருப்பான். இயற்கையை நேசித்து அதனுடன் உறவாடி கொள்பவன். சாதி, மதம் பேதமின்றி அனைவரையும் ஒருமுகமாக பார்க்கும் குணம் கொண்டவனாக இருப்பான். தம்மையே ஈசனாக உருவகப்படுத்தி கொள்பவன்.
எ.கா
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் .
சித்தன் போக்கு சிவன் போக்கு.
மனிதன் என்பவன் மனதிற்கு கட்டுப்பட்டவன். தமது மனம் எதை நினைக்கிறதோ அதற்க்கு உடன் பட்டு நடப்பவன். சடங்கு,சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவன். சமுதாயத்தில் பின்னிப்ப்பினைக்கபட்டவன். தாம் உண்டு தம் வேலை உண்டு என்று உள்ளவன்.
எ.கா
விதிப்படி பயணம்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே.