Monday, September 27, 2010

சிவவாக்கியரின் ஓம் நமச்சிவாயமே .....

சுக்கிலத் துளையிலே  சுரோணிதக் கருவுள்ளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்    
மெய்ச்சதுர மெய்யுள்ளே விளங்கும்ஞான  தீபமா
யுச்சரிக்கு மந்திரம் ஓம்நம  சிவாயமே ..

சிவவாக்கியரின் பாடல்களில் சமுதாய நோக்கங்கள்

அனைவருக்கும் நன்றி,
என்னால் சிறிது காலம் சரியாக பாடல்கள் எழுத முடியவில்லை , மீண்டும்  ஆரம்பிக்க முயற்சிக்கிறேன் .

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லேலும்பினு மிலக்கமிட்  டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும்  பகுத்துபாரு மும்முளே.

Wednesday, September 1, 2010

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை?

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று கூறுவதில்லை ஏனெனில் சித்தத்தை உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன் என்ற நினைப்பில் தம்மை முழுமையும் அர்பணித்து விடுவார்கள். பஞ்ச  பூதங்களை உணரும்போது தான் தம்மையே உணரும் பாக்கியம் கிடைக்கும் , அவ்வாறு கிடைத்த சந்தோசத்தை யாருடன் பகிர்ந்துகொள்வான் ?